முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு மழைக்காலம்..





ஆச்சர்யம்தான்.. வானிலை அறிக்கையில் சொல்லியபடியே தூறல் ஆரம்பித்தது..


வெகுதூரத்தில் எங்கேயோ மண்நோக்கி விழும் சாரல்களில் உரசி ஈரத்துடன் உலாவந்து நம் இதயம்வரை உரசும் அந்த சில்லென்ற காற்றுக்கு மயங்காத மனமும் உண்டோ..?


இருள் சூழும் மாலை வேளை.


மீண்டும் அதே ஈரக்காற்று. வீடு நோக்கி செல்லும் நிறைமதி தன் கையிலுள்ள கல்லூரி புத்தகங்களை சற்று இறுகவே அணைத்துக்கொண்டாள்.


“இப்பவே குளிருதுல்ல” என்றாள் பிரபாவை பார்த்தவாறு.


“ஆமாம்.. லேசா.. இன்னைக்கு சீக்கிரமே இருட்டுன மாதிரி இருக்கு” என்றான் பிரபா.
“குடை கூட எடுத்துட்டு வரலடா.. மழை இப்பவே வந்திடும் போல”


“இன்னைக்காவது வரட்டும். ரெட் அலார்ட், அது இதுன்னு சொன்னங்க போனவாரம்.. வெயில் நம்மளை சாகடிச்சுது. இப்பவாச்சும் சொன்னதுக்கு ஏதாவது பேயட்டும்” என்றான்.

“ரெட் அலர்ட்ன்னா என்னடா” என்றாள் நிறைமதி வேகமாக நடந்தவாறே..
“சரியா தெரியல” என்றவன் சட்டென அலர்ட் ஆனான். பேசிக்கொண்டே வேகமாக நடந்ததால் அவளின் விரல்கள் இவன் விரல்களில் பட்டதினால் வந்த அலர்ட் அது. அவன் சற்றே விலகி நடக்க, அவளோ அறிந்தவளாய் அவன் கண்களைப்பார்க்க..


எதிரே பட்டென மின்னல் மின்னிற்று..


மின்னலை பார்த்தேவிட்டான் பிரபா. அடுத்த அரை நொடிக்குள் நடந்த சம்பவம்.. அது சம்பவம் அல்ல.. சரித்திரம்..

குப்பென கண்கள் இருட்டியது.. அசையாது நின்றான்.. அதே கனம் சில்லென்று அவன் கன்னத்தில் ஏதோ ஒன்று.. அது.. பிரபாவின் உயிர் வரை உரசியதுபோல.. அது என்ன.. எப்படி.. என யோசிக்கும் முன்..

இருளுடன் பயம் முந்திக்கொண்டது. ஐயோ,, மின்னலை பார்த்ததால் பார்வை போயிடுச்சா.. என கண்களை கசக்கினான்.. விழித்தான்.. எதுவுமே தெரியலையே..


இடிசத்தம்.. கூடவே தூரத்தில் நிறைமதியின் சத்தமும் கேட்டது..
“டேய்.. கரண்ட் போயடுச்சுடா.. இருட்டா இருக்கு.. நா குறுக்கு வழியில் வீட்டுக்கு போறேன்..” என சொல்லிக்கொண்டே மொபைல் டார்ச் வெளிச்சத்தில் போனாள்.

கண்களை மீண்டும் கசக்கிவிட்டு பார்த்தான்..


“ச்சே.. மின்னல பார்த்ததால கண்ணு போச்சுன்னு நெனச்சுட்டேன்.. மின்னல் வந்ததும் கரண்ட் போயிருக்கு.. அதான் ஒரே நேரத்தில் இருட்டா போச்சுது..” என்றவன் அனிச்சையாக கன்னத்தை தொட்டுப்பார்த்தான்..


வேறு ஏதோ நடந்திருக்கு என யோசித்தவாறே மொபைல் போனை எடுத்து டார்ச் வெளிச்சத்தை தெருவில் பாய்ச்ச முனைகையில்..
.

“பிளாங்க்.......” என வாட்ஸ்அப் மெசேஜ்... படித்தான்..


அது நிறைமதி... படித்தான்..


“முத்தத்திற்கு அரைநொடி போதாது”
----



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...