முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொண்ணைக்காடு பெரியம்மாவும் எங்க அம்மாக்களுக்கு அம்மாவும்

இன்னைக்கு எங்க ஆபீசில் சாப்பிடும் நேரத்தில் பேசிகிட்டு இருந்தப்போ, இப்போ உள்ள குடும்பங்கள் எல்லாம் ரொம்ப பிரிஞ்சி கிடக்குது என்று பேச்சு எங்கெங்கோ ஆரம்பிச்சு எங்கெங்கோ போயி முடிஞ்சிது.. அவரவர் அவரவர் குடும்ப பழைய நினைவுகளை பேச... என்னவோ திடீர்னு எனக்கு கொண்ணைக்காடு பெரியம்மா  வீடு நினைவுக்கு வர அதை அவங்ககிட்ட சொன்னேன்... (எனது மனதில் பட்டது இவை.. வேறுபட்ட கருத்துக்கள் கூட சிலருக்கு இருக்கலாம், ஆனால்.. பெரிதாக வித்யாசம் இருக்காது என்று எண்ணுகிறேன்.) அதை இங்கே நான் பகிர்வது ஒரு மீள் நினைவலைகளாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.. கொண்ணைக்காடு, மாவடிக்கோட்டை.. அதிகம் நான் முழு ஆண்டு விடுமுறைக்கு போன பெரியம்மாக்கள் ஊர் இவைகள் தான். கொண்ணைக்காடு பெரியம்மா...  அம்மாவுக்கு மூத்த அக்காள் என்பதால், எனது பல பெரியம்மாக்களும் அங்கு சேர்ந்து சென்று முழு ஆண்டு விடுமுறை காலத்தை கழிப்பது (கொண்டாடுவது என்பதே சரியாக இருக்கும்) உண்டு.. வயல், வரப்பு, கால்வாய், தரையில் படர்ந்து கிடைக்கும் மாமரங்கள், பச்சரிசி மாங்காய், தென்னை தோப்பு, குமட்டிக்காய், எள், நிலக்கடலை, தட்டப்பயிர் என பொன் விளையும் பூமியாக ஆத்...

வண்ணங்களும் பழைய எண்ணங்களும்

நான் ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் பக்கதது வீட்டில் வயரிங் செய்திருந்த நேரம், அதற்கு சுவிட்ச் வாங்கும்போது அதை பொதிந்து வைத்திருக்கும் சின்ன அட்டைகளை வெளியே வீசி இருந்தார்கள். அட்டையில் இருக்கும் வண்ண கட்டங்கள் நிரம்பிய பகுதியை நான் கத்தரித்து வைத்திருந்தேன், நெடுநாட்களாக.. எதனால் என்று தெரியவில்லை... கலர் கலராக மிளிரும் அந்த ஜிகினா பகுதி ஒரு மனமகிழ்ச்சி கொடுத்தது.. ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்று ஒரு அண்ணன் எனக்கு வர்ண கலவைகள் நிறைந்த பளபளக்கும் வகை வர்ணங்கள் தீட்டிய பிள்ளையார் சிலையை தந்திருந்தார்.  அதை பத்திரமா வச்சுக்க நினைத்து ஒரு தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு பள்ளிக்கூடம் போய் விட்டேன்.. மாலையில் வீடு வந்ததும் முதல் வேலையாக தொட்டிக்குள் பார்த்து கதறியது உண்டு.  ஆம்.. வர்ணங்கள் எல்லாம் கரைந்து வெள்ளை மற்றும் ஆங்கங்கே களிமண் வெளியே தெரிந்த பிள்ளையார் சிலையாக தண்ணீருக்குள் கிடந்தது.. ரொம்ப கஷ்டமா போச்சு... ஒரு பழைய பேப்பர் கடைக்கு போயி காமிக்ஸ் புக்கு ஏதும் வந்திருக்கா என்று பார்க்கையில் வெவ்வேறு வண்ண காகிதங்கள் உள்ள ஒரு பில் நோட்டை பார்த்து ...

பாதையை உருவாக்கி கொடுப்பதற்கு பதிலாக வழிக்கு வெளிச்சமாக இருக்கும் பெற்றோர்கள் யார்.?

விழுந்துடாத... அப்பவே சொன்னேன் இடிச்சுக்குவ என்று... இப்போ பாத்தியா.... எல்லாத்தையும் பெஸ்ட்டா இருக்கணும் பா... இல்லன்னா வாழ்க்கையில் தோற்றுப் போய் விடுவாய்... இப்படி பிள்ளைகளை எச்சரிக்க ஆரம்பிக்கும் பெற்றோர்கள் பலர்  சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்பட அப்பா போல தன் பிள்ளைகளை தன் கைக்குள்ளேயே வைத்து வளர்க்க துடிக்கிறார்கள் பலர். சென்னை வாசிகள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அவர்கள் சென்னையில் நல்ல கல்வி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சென்னையில் மட்டும் தான் நல்ல கல்வி கிடைக்கும் என்று முழுமையாய் பலர் நம்புகிறார்கள். நம்ம ஊர்ல எல்லாம் கல்வித்தரம் சரி இருக்காது சென்னைக்கு வந்து விடு என்கிறார்கள். கூடவே பல்வேறு ஆக்டிவிட்டிர்களில் பிள்ளைகளை களம் இறக்குகிறார்கள். தன் பிள்ளைகள் சூப்பர் மேன் போலவும், பேட்மேன் போலவும், சூப்பர் உமன்கள் போலவும், பென்டாஸ்டிக் போர் போலவும் இருக்க வேண்டும் என்று விரும்பி.      பிள்ளைகள் பள்ளி முடிந்தவுடன் யோகாசனம் கராத்தே சிலம்பம் இசை பயிற்சிகள் ஹிந்தி ஸ்பீக்கிங் அபாகஸ் கலி கிராபி ஓவியம் வரைதல் அது இது என்று பிள்ளைகளுக்கு பித்து பிடிக்க வை...

காதலு(லி)க்கு இன்னொரு காலம்

நான் காத்து காத்து   நின்றுகொண்டு இருந்தேன்.. அவள் மறைந்திருந்து பார்த்து பார்த்து  காதலில் விழுந்துகொண்டு இருந்தாள்..! கால்கடுக்க நான் நின்றது  தாங்காது போய்விட்டேன், பார்த்து விழுந்ததே தாங்காது  காதலில் தொலைந்து போயிருந்தாள்..! என்றாவது ஒருநாள்... அவள் காத்திருக்க.. நான் விழுந்திருப்பேன்..!

எஜமான விசுவாசம் எனும் பேராபத்து

ஆண்டாண்டு காலமாகவே மன்னர் ஆட்சியிக்கும் முன்னரே இருந்து பண்ணை அடிமை முறை வரை பரவலாக இருந்தாலும் இன்றளவும் இதன் மீட்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  எ(வ)சமான விசுவாசம்.!! ஒரு சின்ன மளிகை கடையிலும் தேநீர் கடையிலோ வேலை செய்யும் நபர்களாக இருந்தாலும் சரி பெரிய பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகளில் வேலை செய்யும் நபர்களாக இருந்தாலும் சரி, தன் பொறுப்பு, தன் பதவி, தனக்கான வேலை, நிறுவனத்திற்கான செயல்பாடுகள், வாங்குகிற சம்பளம், இவற்றையெல்லாம் கடந்து எங்க முதலாளி எங்க ஓனர் என்ற அபரிமித நம்பிக்கையோடு உள்ள விசுவாசம் பெரும்பாலும் பலரிடத்தில் உண்டு. வேலை செய்பவர்கள் இப்படி விசுவாச வீரர்களாக இருந்தாலும் முதலாளிகளின் கண்ணோட்டத்தில் எல்லோருமே வேலையாட்கள் தான்.  இதில் பதவி சம்பள வேறுபாடுகள் எல்லாம் கடந்து வேலையாட்கள் என்பவர்கள் வேலையாட்கள் தான். அரிதாக சில முதலாளிகள் ஒரு சில நன்மைகளை தொடர்ந்து தங்கள் வேலையாட்களுக்கு செய்து வருவதும் இங்கு மறக்க முடியாத ஒன்று தான் மறுக்க முடியாத ஒன்றுதான். மற்றபடி,  ஒருவரை வேலைக்கு அமர்த்துகிறோம் என்றால் அவருக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு அவரை எப்படி வேலை ...

திருமண வாழ்க்கை கடினமானால் பிரிந்துவிடுவது சிறந்ததா..?

 திருமண வாழ்க்கை கடினமானால் பிரிந்துவிடுவது சிறந்ததா..? "இல்லம்மா.. இனியும் நீ அந்த கொடுமைக்காரன் கிட்ட கஷ்ட்டப்பட்டு வாழ வேண்டாம், பிரிந்து வந்திடு, விவாகரத்து வாங்கிட்டு உன் வழியை பார்த்துகிட்டு போயிடு" "இப்படி ஒருத்திகூட நீ இனிமேல் குடும்பம் நடத்தினால், உன்னையும் கொன்னுட்டு பிள்ளைகளையும் கொன்னுட்டு போயிடுவா அவ, இந்த பாவி சிறுக்கியோட இனி வாழ்க்கை என்ன, விவாகரத்து வாங்கிட்டு அடுத்து என்னன்னு பாரு" ஒரு ஆணோ, பெண்ணோ... அவரது குடும்பம்,  உறவுகள்,   நட்புகள் எல்லோரிடமும் அன்பானவன்/ அன்பானவள், கண்ணியம் மிக்கவள்/ மிக்கவன், நல்ல குணமுள்ளவர்கள், பொறுப்புள்ளவர்கள் என மிக நல்ல பெயர் எடுக்கிறார்கள், அதே வேளையில் தனது கணவன் அல்லது மனைவியிடம் சிலரோ மிக வெறுப்பான நிலையை சம்பாதிக்கிறார்கள். எப்படி இது உண்டாகிறது? எல்லோருக்கும் நல்லவராக, குணவான்களாக, குணவதிகளாக இருக்கும் ஒருவர் திருமண பந்தத்தில் சிக்கல் உள்ள மோசமான நபராக எப்படி ஆகிவிடுகிறார் என்பது பெரிய உளவியல் சிக்கலான ஒன்றாக உள்ளது. அதை விடுத்து, இந்த சிக்கல்கள் விவாகரத்தில் கொண்டுவந்து விடுகிறது.. விவகாரத்த்தும் ஆகிவிடுகிறது.. ...
  பொறுப்பும்... துறப்பும்...! மேலதிகாரி இந்த பொறுப்பு எனக்கு கொடுத்துவிட்டார் நான் எப்படியாவது இது முடித்தே ஆக வேண்டும் என்று கடமையே கண்ணாக நின்று பொறுப்பை நிறைவேற்றும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் நம்மீதான நம்பிக்கைக்கும் கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பு. அதை சிறப்பாக செய்து முடிப்பது கடமையாக இருக்கலாம். ஆனால் வேறு பல பொறுப்புகளும் தனிப்பட்ட விதத்தில் இருக்கின்றன. அதில்  எல்லாம் மூக்கை நுழைத்து தான் மிகவும் பொறுப்பானவர் என்று நிரூபிப்பதற்காகவே பலர் பொறுப்புகளை அள்ளி சுமப்பார்கள். சிலவற்றை தூரிதமாக நிறைவேற்றுவார்கள் சிலவற்றை நிறைவேற்ற முடியாமல் வருந்துவார்கள். பொறுப்புகளுக்கும் நேரத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. ஒரு முறை ஒரு நண்பர் எங்கள் வீட்டில் இருக்கும் டிவியை பார்த்துவிட்டு இதே போல் டிவியை நாங்கள் வாங்க வேண்டும் என்று அவர் வீட்டில் உள்ளவர்கள் கூறினார்கள் எனவே இனியும் தாமதிக்காது நான் டிவி வாங்க வேண்டும் என்று அந்த டிவியை பற்றி அதன் தகவல்களை விசாரித்து குறிப்பு எடுத்துக் கொண்டார். நான் கூறினேன் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், இன்னும் ஒரு சில வாரங்க...