சொல்லிய காதலை விட..! தினந்தோறும் கடந்துபோகிறேன் தார் சாலையிலும் உன் பாதச்சுவடுகளின் தேடல்களிலேயே..! கல்லூரி விடுமுறை. ஒரு நாள் என்றாலும் கசக்கிறது நிமிடங்கள் அத்தனையும்.. பேசியதில்லை ஒருநாளும்.. கூச்சம் பெண்களுக்கு மட்டுமேயான சொத்தா என்ன..? கல்லூரி மரநிழலில் அமரும் ஜோடிகளை நீயும் நானுமாய் நினைத்த கற்பனையிலேயே கரைகிறது காலங்கள், நீ அமரும் இடத்தில் நான்வைத்த ஆவாரம்பூ கொத்துக்களை யார்யாரோ எடுக்கிறார்கள், உனக்குமட்டும் கிடைக்காதோ ஒருநாளும்.. அவர்களால் மட்டுமே முடியும் போலிருக்கிறது மௌனம் உடைத்து காதலிக்க, நினைக்கையில் மௌனமே இங்கு பகை, கடைசி ஆண்டும் அப்படியே, உனக்கும் புரிகிறது, எனக்கும் புரிகிறது பழிவாங்கும் மௌனத்திற்கு புரிதலில்லை.. கண்ணீரை பருகுகிறேன் உள்ளத்தின் மௌனக்கனல் கொதிக்கையில் இன்னும் அனலாக கல்லூரியும், நீயும், மௌனமும்... கடைசி நாளும் அப்படியே, எல்லோரும் எழுதும் உன் ஆட்டோகிராப் டைரியில் எனக்குமட்டும் இடமில்லையோ.. கல்லூரி காலங்கள் முடிந்த பின்னும் சாலைகளில் அலைகிறேன் வெறும் கால்களுடன் உன்பா...