முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பறவைகளைத் தேடும் கூடுகள்

பறவைகளைத் தேடும் கூடுகள்



வாழ்வும் வளமும் எதில் கட்டமைக்கப்படும் என்பதே இங்கு பெரிய தேடலாய் இருக்கிறது. பள்ளத்தூரில் நான் பார்த்து வியந்த வீடுகளின் பிரமாண்டம் பெரிது. நம்ம ஊருகளில் இருக்கும் தெருக்களில் நூறு நூற்றைம்பது வீடுகள் உள்ளது. அதுவே அங்கு இரண்டு அல்லது நான்கு வீடுகளுக்கே போதாது. வீதிகள் ஊரை கிழிக்கும் நேர்க்கோடுகள்.! அத்துணை துல்லிய கட்டமைப்பு. பெரும் திண்ணைகள், இரும்பு போன்ற மரத்தூண்கள், இரண்டடுக்கு கொண்ட ஓட்டு வீடுகள், வெளியே உள்ள திண்ணைக்கு சற்றும் சளைக்காமல் பிரம்மாண்டமாய் வெளிச்சம் நிறைந்த நடு முற்றம், அதில் இருந்து மழைநீர் வெளியேற வழித்துளைகள்.! வீடு நிரம்பிய உறவுகள், மாபெரும் குடும்பப்பறவைகளின் சிறந்த கூடு அது.!


ஆம்.. செட்டிநாட்டு வீடுகள் ஒரு பெரும் கூடுகள்தான்.!


உறவுகளும் உணர்வுகளும் பிறப்பித்த பிரம்மாண்ட வீடுகள் பல இன்று வெறிச்சோடி கிடக்கின்றன. சந்ததிகள் பல வேறு நாடுகளில் சென்றுவிட, தாத்தா பாட்டிகள் விழுதுகளை இழந்த ஆலமரமாய் தள்ளாடி, வெற்று மனதோடு அந்த நிசப்தம் விழுங்கிய வீடுகளுக்குள் நினைவுகளை சுமந்து கிடக்கின்றனர்.


பறவைகளைத் தேடும் கூடுகள்

மண்ணின் நிறம் தெறிக்கும் வீடுகள்
சீமையோடு மூடிப்போட்ட நேர்க்கோடுகள்
கொல்லைபுறமில்லா வாசல்கள்
இருவாசல் இணைக்கும் நேர் வீதிகள்

குரங்கது வந்துபோகும் அனுதினமும்
கூட்டமாய் பட்சிகளும் இரைகாணும்
மிதிபட்ட இடமெல்லாம் நீரூறும்
மண்ணின் மணம் மாறாதெந்நாளும்

கட்டிடக்கலைக்கோர் பொற்காலம்
ஒவ்வொரு சன்னலுக்கும் வர்ணசாலம்
திண்ணைக்கும் வாசலுக்கும் போட்ட கோலம்
அரைப்படி மாவேனும் அதுக்காகும்

அப்பச்சிக்கும் ஆச்சிக்கும் ஒரு பக்கம்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு பக்கம்
சித்தப்பா வகையறாக்களுக்கு ஒரு பக்கம்
சின்னத்தாத்தா பெரியத்தாத்தா ஒருபக்கம்

மாமன் மாமி வந்துவிட்டால் ஒருபக்கம்
மற்றயாரும் வந்தாலோ ஒருபக்கம்
நாற்புறமும் பல அறைகளுள்ள வீடுகளே
வழிபோக்கருக்கும் பெருந்திண்ணையுள்ள வீடுகளே

வருசத்துக்கு அஞ்சாறு கல்யாணம் காதுகுத்து
வந்துபோகும் உறவுதானே மொத்த சொத்து
பாகம் பிரிச்சாலும் நடுமுற்றம் பொது
உறவுக மாறாத ஊர்க இன்னுமிருக்குது

ஒருவீட்டு சனங்களுக்கே இரண்டு பந்தி
பெருங்கூடுகட்டி பறவைகளாய் இருக்கும் சந்ததி
காலம் போட்ட கோலமென்ன யாருகண்டா – இந்தக்
காலம் போட்ட கோலம்மாற வழியுமுண்டா

பொழப்பு தந்த மக்க கூட்டம் பொழப்பு தேடி
போனதென்ன கூடுவிட்டு கடல தாண்டி
வீட்டுக்குள்ள செடிமொளச்சு கெடக்குதடி – இந்த
சொர்க்கபூமி மாறிடுமோ பழையபடி..!?


தூரத்தில் நினைவுகளுடன்..!
மு.பூங்குன்றன்






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...