அகல சாலையின் ஒருபுறம், நீண்டிருந்த தெருவின் துவக்கத்தில், யாரோ ஒரு புண்ணியவான் வளர்த்துவிட்டுப்போன ஒரு புங்கை மரத்து நிழலில் மாயத்துரை மும்முரமாய் வேளையில் இருந்தான். ஒரு நீண்ட சாக்கு, அதின்மீது எங்கோ கிடைத்த பேனரை மடக்கிபோட்டு அதின்மீது பலகைகட்டையை போட்டு அமர்ந்திருந்தான் மாயத்துரை.. கை லாவகமாய் பின்னல்களை உருவாக்குவதும் பின் முடிசிகளாய் உருவேற்றுதலும் தொடர்ந்து நடந்தேறியது. அவனுக்கு முன்பாய் வரிசையாக சில ஜோடி செருப்புகளும், சில ஜோடியத்தொலைத்த செருப்புகளும் இருந்தன. அது ஒரு சாலையோர கடை என்று சொல்லமுடியாது. இரண்டு நிமிடங்களில் சுருட்டிவிடும் அளவிலே இருந்த சிறு குடைக்குள் அடங்கும் கடை போலத்தான் அது..! ‘பிஞ்சிடுச்சு’ என்று தொப்பென செருப்பை போட்டாள் ஒரு இளம்பெண். ‘மாயத்துரை இருக்கையைவிட்டு சற்று முன்பாக சாய்ந்து எக்கியவாறு அந்த செருப்பை எடுத்து அதை துடைத்தான். பின் அதில் தையலை போட ஆரம்பித்தான். முதலில் சைக்கிள் ஸ்டாண்டில் வரிசையாய் சாய்ந்து விழுந்த சைக்கிள்களைப்போல தையல் உருவாகி, பின் ஐந்து நிமிடங்களில் முடிசச்சுகளுடன் இறுதி இலக்கை அடைந்தது. ‘இந்தாங்கம்மா’ ...