முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

“செவ்வாய் கிரகத்தில் விலங்கின் தொடை எலும்பும் வடக்கு சென்டினல் பழங்குடிகளும்”

புதியன புகுத்துதலில் ஏற்பட்ட மாற்றங்களே மனித சமூகத்தின் மாற்றத்திற்கான அத்தாட்சியாக இருந்துவருகிறது. சூழல்களை தனக்கு ஏற்றார்போல மாற்றி அமைத்துகொள்வதில் மானுடத்திற்கு நிகரில்லை. தேடல் மனித குல வாழ்வை உற்சாகமாக மாற்றிவிடுகிறது என்பது மிகையல்ல. ஆனால் மிகையான தேடல்கள் மானுடத்தை ஏதோ ஒரு அசுர குணத்தை நோக்கி உந்தி தள்ளுகிறது. சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் விலங்கின் தொடை எலும்பு போல ஒரு புகைப்படத்தை அந்த கிரகத்தில் தனிக்காட்டு ராஜாவாக சுற்றி திரியும் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியது. இது போதாதா..? இது இப்படியே இருக்கட்டும்.   சற்று அந்தமான் சென்டினல் ( 1771 ல் பிரிட்டிஷ் கம்பெனி இப்பெயரை வைத்தது என்கிறார்கள், சென்டினல் என்றால் காவலாளி என பொருள்)   தீவு பக்கம் நடந்ததை பார்க்கும் முன்..   அங்கு சென்று கொல்லப்பட்ட ஜான் ஆலனின் டைரி குறிப்புகளில் இருந்து கிடைத்த ஒரு செய்தி பின்வருமாறு.. மூன்றாவது நாள் அங்கு சென்றபோதே அவருக்கு தனது மரணம் பற்றி தெரிந்திருக்கிறது. அதனாலேயே , " நான் சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகாக உள்ளது. அழுகிறேன். இதுதான் ந...

புது மனிதனும் பழங்குடிகளும்

உனைப்போல இங்கு   நானில்லை        உனக்காக இங்கு நானில்லை எனைக்காண இங்கு வந்தாலும்        இயல்பாக எங்கும் நீயில்லை புதியன நிதம் தேடியலையும்        உன்னருகிலோ வாடிய உயிரும் அதை காணாது விட்டபோதும்        புதுவுயிர் தேடுதல் தகுமோ இயற்கை காற்றையும் வடிகட்டியிழுத்தாய்        தெளிநீரிலும் தினம் தீதுகலந்தாய் கானக நடுவிலும் கட்டிடங்களமைத்து        இயல்புக்குமீறி பதார்த்தங்கள் சமைத்து ஆயுள்குறைத்து அழியும் நீயோ        உன் சாபத்திலெம்மை சேர்க்கவந்தாயோ விந்தையாய் கண்டாய் மின்சுடுகாடு - உன்        புலனுக்கெட்டாது எங்கள் புத்துயிர்க்காடு -பூங்குன்றன்

ஒரு மழைக்காலம்..

ஆச்சர்யம்தான்.. வானிலை அறிக்கையில் சொல்லியபடியே தூறல் ஆரம்பித்தது.. வெகுதூரத்தில் எங்கேயோ மண்நோக்கி விழும் சாரல்களில் உரசி ஈரத்துடன் உலாவந்து நம் இதயம்வரை உரசும் அந்த சில்லென்ற காற்றுக்கு மயங்காத மனமும் உண்டோ..? இருள் சூழும் மாலை வேளை. மீண்டும் அதே ஈரக்காற்று. வீடு நோக்கி செல்லும் நிறைமதி தன் கையிலுள்ள கல்லூரி புத்தகங்களை சற்று இறுகவே அணைத்துக்கொண்டாள். “இப்பவே குளிருதுல்ல” என்றாள் பிரபாவை பார்த்தவாறு. “ஆமாம்.. லேசா.. இன்னைக்கு சீக்கிரமே இருட்டுன மாதிரி இருக்கு” என்றான் பிரபா. “குடை கூட எடுத்துட்டு வரலடா.. மழை இப்பவே வந்திடும் போல” “இன்னைக்காவது வரட்டும். ரெட் அலார்ட், அது இதுன்னு சொன்னங்க போனவாரம்.. வெயில் நம்மளை சாகடிச்சுது. இப்பவாச்சும் சொன்னதுக்கு ஏதாவது பேயட்டும்” என்றான். “ரெட் அலர்ட்ன்னா என்னடா” என்றாள் நிறைமதி வேகமாக நடந்தவாறே.. “சரியா தெரியல” என்றவன் சட்டென அலர்ட் ஆனான். பேசிக்கொண்டே வேகமாக நடந்ததால் அவளின் விரல்கள் இவன் விரல்களில் பட்டதினால் வந்த அலர்ட் அது. அவன் சற்றே விலகி நடக்க, அவளோ அறிந்தவளாய் அவன் கண்களைப்பார்க்க.....

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

கஜா... அழிவின் நிகழ்காலம்..!

கஜா... அழிவின் நிகழ்காலம்..! (கஜா புயலின் அன்றைய மாலை வேளை) நெத்தியில் நெலா கணக்கா      சுத்துப் பொட்டுவச்ச பூவாயி கார்மேகம் சூழும் முன்னே      ஊருக்குள்ள போக எண்ணி வெரசாத்தான் அவ நடக்க      தூறல் மொத்தம் வெரட்டி வர ஓட்டமும் ஓடி நடையுமாத்தான்      வீடுவந்து வேர்த்து சேர்ந்துவிட்டாள் நாலுநாளா மக்க காத்து நிக்கும்      எங்க கண்ணும்கூட வேர்த்துப் பார்க்கும் சொன்ன மழை அப்போ இல்ல      இன்ன சொல்லாம இங்க வந்ததென்ன.. நம்பி அவ துவச்சு போட்ட மஞ்சப் புடவை இன்னும் ஈரத்தோட காயும் முன்னே வந்த மழை      ஈரம் காயுமுன்னே கால் நனைக்க இராத்திரிக்கு அந்த மொத்த ஊரு      அடை மழைக்குள்ள நனஞ்சு போக மிச்ச மீதி மேட்டைக் கூட      பேயும் கருத்த மழை நெறச்சிருக்க மொத்த மேகம் பொத்துகிச்சோ      பூமி தெச மாறி சுத்திடுச்சோ அலையும் காத்து மழை தாங்கலியே ...