முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலையை சுமப்பவன்

கற்றது கைய்யளவு எம் சான்றோர் உரைத்தது கற்று பெற்றது அகந்தையானால் வீணுற்றதது தலைக்கனம் ஏறி வாழ்வின் வழி வலியோடாயின் இலக்கணம் மாறி தலை தள்ளுவண்டியிலாகும்.. ஒருமனமாகா சில திருமண வாழ்வுமே எதிர்காலத்தின் கனவுகள் இருளினில் கரையுமே மண வாழ்வது வரமே என்றுணராவிடில் மன பாரமும் தலைக்கேறி தள்ளுவண்டியிலாகுமே.. அகத்திற்கு ஒளியும் தேகத்திற்கு உணவும் உளத்திற்கு உணர்வும் ஊருக்கு நீரும் கொடாத அரசும் குடிகேடாக்கும் குடியும் கண்டு நொந்தவன் தலையது தள்ளுவண்டியிலாகுமே.. உடையது வெள்ளை தம் உணர்வும் கூட நடையது நேர்மை நன் நாணயம் தேட தெருக்கடையது திறந்தால் கப்பம் கேட்டிட நேர்மையின் கூடவே மாண்ட தலையது...... தள்ளுவண்டியிலாகுமே..! தள்ளுவண்டியிலாகுமே..!! தள்ளுவண்டியிலாகுமே..!! -பூங்குன்றன்

காடு

பகலா இரவா உணரா இருளாய் நெஞ்சம் பதைக்கும் நிசப்த பாதையை துயிலா குயில்கள் பாடல் ஓசை எழிலாய் கேட்ததை கடந்திட ஆசை.! நிசப்த காட்டினை கண்டிலேன் நானும் சிலபோழுதாயினும் அங்கே தங்கிடத்தோனும் நகர இரைச்சலில் நரகத்தை காணும் – கண்கள் அகன்ற விழியுடன் கானகம் காணவே தோணும் மந்தி ஒருபுறம் மயக்கிடும் தாவலில் சிலந்தி கட்டிடும் சல்லடை வீடெழில் வளைந்த பாம்புடல் வண்ணத்தைக் கொட்ட என்னத்தைக் கொண்டு காட்டின் அழகினைத்தீட்ட சில்லிடும் நீரின் பிறப்பிடம் அறியேன் மெள்ள நீர்த்தழுவும் கர்ப்பாறையும் உருகும் தொட்டிட நாணல் உச்சியும் வளையும் – எல்லாம் கடந்திட ஓடி வெள்ளி அருவியாய் பொழியும் காலையும் மாலையும் காடது ஒன்றுதான் ஓசையும் அமைதியும் ஓங்கிட நன்றுதான் காசையும் பேராசையும் காட்டினில் புகுந்ததாம் நீச மானுடம் கானகம் மொத்தம் அழிக்குதாம்.! பூங்குன்றன்

ஒரு நாள் வரும்..!

‘பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்.!’ ‘வரம் எல்லாம் வேணாம் சாமி, ஒரு துப்பாக்கி வேண்டும். அதுல தோட்டாக்கள் என்றுமே தீரக்கூடாது, நான் யாரை சுட்டாலும் தெரியக்கூடாது’ ‘பக்தா, ஏன் இந்த ரத்தவெறி?’ ‘சாமி, நீ ஒருதாய் மக்களாய் எங்களை படைச்ச. பலருக்கும் நல்லது சொன்ன. பயபுள்ளைங்க அதை ஆளுக்கு ஒரு விதமா புரிஞ்சிகிட்டு நான்தான் சரி, நீதான் சரி அப்டின்னு அகராதி பிடிச்ச மாதிரி மதத்தை உருவாக்கிட்டாங்க’ ‘அது அரைகுறைகள் உங்களின் பிழையல்லவா..?’ ‘அது போகட்டும், ஒவ்வொரு மனுசங்களும் ஒவ்வொருத்தர மதிச்சு நடக்க, நேர்மையாய் வாழ, உத்தமமாய் வாழ்வை கொண்டாட பல போதனைகளை சொன்ன. ஒருத்தரும் கண்டுக்கல, அதை விட்டுட்டு இப்போ அடிசிகிட்டு சாகுராணுங்க, எல்லாத்திலும் லஞ்சம், ஊழல், கொள்ளை, கொலை, பாலியல் கொடுமை, திமிரான போக்கு........’ ‘போதும் போதும், லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது’ ‘ஓ..   சாமியும் வடிவேலு படம் பாப்பீங்க போலிருக்கு’ ‘ஹா.ஹா.ஹா..   எனக்கு மறைவானதொன்றும் இங்கு இல்லை பக்தா, நீ இருளில் மறைந்தாலும் வெளிச்சத்தில் நடந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதாம். என்னில் இருந...