பகலா
இரவா உணரா இருளாய்
துயிலா
குயில்கள் பாடல் ஓசை
எழிலாய்
கேட்ததை கடந்திட ஆசை.!
நிசப்த
காட்டினை கண்டிலேன் நானும்
சிலபோழுதாயினும்
அங்கே தங்கிடத்தோனும்
நகர
இரைச்சலில் நரகத்தை காணும் – கண்கள்
அகன்ற
விழியுடன் கானகம் காணவே தோணும்
மந்தி
ஒருபுறம் மயக்கிடும் தாவலில்
சிலந்தி
கட்டிடும் சல்லடை வீடெழில்
வளைந்த
பாம்புடல் வண்ணத்தைக் கொட்ட
என்னத்தைக்
கொண்டு காட்டின் அழகினைத்தீட்ட
சில்லிடும்
நீரின் பிறப்பிடம் அறியேன்
மெள்ள
நீர்த்தழுவும் கர்ப்பாறையும் உருகும்
தொட்டிட
நாணல் உச்சியும் வளையும் – எல்லாம்
கடந்திட
ஓடி வெள்ளி அருவியாய் பொழியும்
காலையும்
மாலையும் காடது ஒன்றுதான்
ஓசையும்
அமைதியும் ஓங்கிட நன்றுதான்
காசையும்
பேராசையும் காட்டினில் புகுந்ததாம்
நீச
மானுடம் கானகம் மொத்தம் அழிக்குதாம்.!

கருத்துகள்
கருத்துரையிடுக