முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரவு உலா.!

-சிறு(பேய்?)கதை- ‘அண்ணே, நல்லா இருட்டிடுச்சி, வெரசா போய்ச்செரனும்’ ‘ஆமாடே, நடுவால உள்ள சுடுகாட்ட தாண்டி போயிட்டோம்னா சரி. எழவு, ஊருக்கு போற ரோட்டுலையா சுடுகாட வைப்பானுக, நம்ம ஊரு கிழடுகளுக்கு புத்தி மங்கி கெடந்திருக்கும் போல’ ‘ராத்திரி நேரத்துல எழவு அது இதுன்னு அவச்சொல்லா சொல்லுற, இன்னும் சுடுகாட்ட நாம நெருங்கவே இல்ல, நீவேற,   வாயில ‘அபா அபா’ன்னு போட்டுக்கண்ணே’ ‘என்னடா பச்சப்புள்ளகிட்ட சொல்ற மாதிரி இருக்கு, பயம் இல்லாம வாடே’ என்றவனுக்கும் உள்ளூர நடுக்கம் வெகுவாக இருந்தது. .... பின்ன, ‘சாக்கையன்கொள்ளை சுடுகாடுன்னா சும்மாவா’ன்னு ஊரு பெருசுக பேய், ஆவி கதைகளை ஆரம்பிச்சா பலபேருக்கு பீதியில பேதி ஓடிடுமாக்கும். சுத்துப்பட்டு கிராமம் எல்லாம் சாக்கையன்கொள்ளை சுடுகாடுன்னா ஏதோ ‘ஜமீன் கோட்டை’ பட எபெக்டுக்கு நடுங்குவாங்க. எவ்ளோ பெரிய மோடிமஸ்த்தானா இருந்தாலும் சாக்கையன்கொள்ளை எனும்போதே சகஜ நிலை விட்டோடும். அந்த மாவட்டம் முழுவதும் ஆவி, பேய் விசயத்துக்கு இந்த பெயர் மிக பிரபலம். இருவரும் மாட்டு சந்தைக்கு போய்விட்டு, இரவு சினிமா சென்றதால், கடைசி பேருந்தை தவ...

சொல்ல மறந்த வார்த்தைகள்

மனிதன் செய்யும் மடமைகளுக்கு கடவுளை குறைசொல்வது என்பது சரியான புரிதல் அல்ல. நம்பிக்கை இல்லை என்றால் நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிடலாம். அல்லது அதற்கு வசைபாடுதலை கேட்க மக்கள் இருக்கிறார்களே.   தாராளமாக வசைபாடுங்கள். கேட்டுகொள்கிறோம். ஏளனம் செய்யுங்கள். அமைதியாய் கவனித்து அப்புறம் கடந்து செல்கிறோம். * மாறாக கடவுளை கொச்சையான பதங்களை பயன்படுத்தி பொதுவில் பதிவிடுதலை தவிருங்கள். * உங்கள் ஞான கண்களுக்கு புலப்படாத பல உண்டு இந்த உலகில் , அதை நீங்களும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறீர்கள், ஆனாலும் இதுவரை உங்கள் கண்கள் அவைகளை கண்டதேயில்லை. கடவுள் நம்பிக்கை முட்டாள்தனமாக சிலருக்கு தெரிந்தாலும் கடவுளே இல்லை என்பது பலருக்கும் முட்டாள்தனமாகவே தெரியும் என்பதை சிலருக்கு மனது உணர்த்தினாலும் புத்தி கண்டுகொள்வதில்லை போலும். மதமாற்றம் என்பது சரியா தவறா என்பது குறித்து இங்கு கருத்து சொல்ல ஒன்றுமில்லை. எல்லோரும் நல்ல ஞானம் உள்ளவர்களே இக்குழுவில் உள்ளனர். ஆனால், நான் வழிபடும் இறைவனை பற்றி, நம் நம்பிக்கை பற்றி, நம் புரிதல் பற்றி மற்றவருக்கும் எடுத்துச்சொல்வது குற்றம் அல்லவ...

கிளைவிட்ட பனைமரங்கள்

சிறுகதை பகுதி சென்னை புத்தக கண்காட்சி. எவ்ளோ கூட்டம். ‘வாகன நிறுத்தத்தில் டோக்கனுக்கு காசு வாங்கும் அதி தீவிரத்தை வாகன நிறுத்துமிடத்திற்கும் காட்டுங்கப்பா’ என்றவரை சட்டை செய்யாமல் சீட்டை கிழித்து கொடுத்தார்கள். ‘பொதுநல கருத்து எப்பவும் அசைட்டையாய் போகிறது’ என நொந்து கொண்டு போனவரை நான் அந்த கூட்டத்திலும் கவனிக்கத் தவறவில்லை. இது எனக்கு முதல் முறை. எங்கு திரும்பினாலும் புத்தக அடுக்குகள் என்னை மலைக்க வைத்தது. சென்னையில் வாசிப்பின் அவசியம் உணர்ந்தவர்கள் இத்தனை லட்சம் மக்களா என வாய் பிளந்தபடியே ஒவ்வொரு புத்தகக் கடைகளாக நீந்தினேன். மாபெரும் புத்தகக்கடலுக்குள் பல பவளப்பாறைகளை நீந்தி கடப்பது போல இருந்தது எனக்கு அந்த வண்ண வண்ண எண்ணங்கள் அடங்கிய புத்தகங்களை கடந்து செல்கையில். ஏதோ பழைய வண்ணம் என் அருகில் இருப்பதாக என மனம் உணருகையில், சட்டென திரும்பிய என் கண்களுக்கு முழு இரத்தமும் பாய்ந்தது. அது.. ஆமாம்.. சத்தியமா அது நிறைமதிதான். எந்த தூரிகையாலும் தீட்டப்படாத வண்ணத்தில் அவள் சில புத்தகங்களை புரட்டிக்கொண்டு இருந்தவள், மின்னல் கீற்றாய் என்னை பார்த்து...

மக்களும் மாக்களும் சூழ்ந்த உலகு

தேர்தலு வரப்போகுது தாண்டவக்கோனே - ஊரு கரைவேட்டியால் கரையாகுது தாண்டவக்கோனே கடனில் தத்தளிக்கும் தமிழகத்திலே – தேர்தல் வந்தாலே நோட்டு வாசம் தாண்டவக்கோனே மண்ணாப்போன மனுஷனுக்கு தாண்டவக்கோனே - ஓட்டின் முக்கியத்துவம் தெரியலயே தாண்டவக்கோனே நாடு நல்லா இருக்கணும்னு நாலு நெனச்சா - காசுபாக்க நாலாயிரம் அலையுதிங்கே தாண்டவக்கோனே அஞ்சு வருசத்துகுக்கொருமுறை ஆயிரம்ரூபா –இங்கே அத்தனையும் அழிச்சிடுத்தே தாண்டவக்கோனே படிச்சவனும் குடிச்சவனும் ஒன்னு சேர்ந்துதான் – கட்சி கலவரத்தில் கன்னமிடுறான் தாண்டவக்கோனே புத்திசொல்ல வாய்தொறந்தா தாண்டவக்கோனே- பயபுள்ள கத்தி எடுத்து கழுத்த சீவுறான் தாண்டவக்கோனே எத்தனையோ சொல்லி சொல்லி மடுத்துபோச்சுதான் – உலகம் மொத்தமாயழிஞ்சாலும் திருந்தமாட்டான் தாண்டவக்கோனே -     பூங்குன்றன்