மனிதன் செய்யும்
மடமைகளுக்கு கடவுளை குறைசொல்வது என்பது சரியான புரிதல் அல்ல.
நம்பிக்கை இல்லை
என்றால் நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிடலாம்.
அல்லது அதற்கு
வசைபாடுதலை கேட்க மக்கள் இருக்கிறார்களே.
தாராளமாக வசைபாடுங்கள். கேட்டுகொள்கிறோம். ஏளனம் செய்யுங்கள். அமைதியாய்
கவனித்து அப்புறம் கடந்து செல்கிறோம்.
*மாறாக
கடவுளை கொச்சையான பதங்களை பயன்படுத்தி பொதுவில் பதிவிடுதலை தவிருங்கள்.*
உங்கள் ஞான
கண்களுக்கு புலப்படாத பல உண்டு இந்த உலகில் , அதை நீங்களும்
பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறீர்கள், ஆனாலும் இதுவரை உங்கள் கண்கள் அவைகளை
கண்டதேயில்லை.
கடவுள்
நம்பிக்கை முட்டாள்தனமாக சிலருக்கு தெரிந்தாலும் கடவுளே இல்லை என்பது பலருக்கும்
முட்டாள்தனமாகவே தெரியும் என்பதை சிலருக்கு மனது உணர்த்தினாலும் புத்தி
கண்டுகொள்வதில்லை போலும்.
மதமாற்றம்
என்பது சரியா தவறா என்பது குறித்து இங்கு கருத்து சொல்ல ஒன்றுமில்லை. எல்லோரும்
நல்ல ஞானம் உள்ளவர்களே இக்குழுவில் உள்ளனர்.
ஆனால், நான்
வழிபடும் இறைவனை பற்றி, நம் நம்பிக்கை பற்றி, நம் புரிதல் பற்றி மற்றவருக்கும்
எடுத்துச்சொல்வது குற்றம் அல்லவே. மக்களை நல்வழிப்படுத்த எத்தனையோ மார்க்கங்கள்
இருப்பினும் பெரும்பாலும் எல்லாம் ஓரிறை கொள்கைகளே. அது எந்த மார்கத்தில் தெளிவாய்
உள்ளது என்பதை பலர் கூறுவதை கேட்காமல் அறிய இயலாது.
விருப்பம்
இல்லையா, ? “இல்லைங்க, எனக்கு வேண்டாம்,” என்று ஒதுங்கிப்போங்க.
அதை விடுத்து
“அய்யய்யோ, மதத்தை மாத்துறாங்க, போச்சு போச்சு என அலறும் அளவுக்கு மதமாற்றம்
ஒன்னும் ஒரே இரவில் நடக்கும் பணமதிப்பிழப்பு போல செயல் அல்ல.
அப்படி
காசுக்கும், பணத்திற்கும், இல்லாமைக்கும், இயலாமைக்கும், மிரட்டலுக்கும் மதமாற்றம்
நிகழ்ந்தால் அது ஒரு சடங்கு மட்டுமே. அது தேவையில்லை. ஒதுக்கித்தல்லிவிடலாம்.
திரும்ப தாய்மதம் மாறிக்கொள்ளலாம். யார் தடுத்தது..?
ஆனால்,
*உண்மை இறைவனை
நெருங்க உதவும், உரிமை கொண்டாடும் வழிமுறைகள் அல்லது இறைவனின் வாக்குறுதிகளை
பெற்று ஆன்மீக தேடலின் வினைப்பயன் அடைய உதவும் வழிகளை அடைந்த ஒரு ஆன்மா மீண்டும்
தன முந்தைய நிலை திரும்புமா என்றால்.. திரும்பாதே.!*
ஏன் என எல்லோருக்குமே விடை தெரியும்.! மெய்ப்பொருள்
அறிந்த ஆன்மா தன்னிலை உணருமே..!
*அதே சமயம் எதோ
தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல மதமாற்றம் நிகழ்கிறது. அது கண்டிக்கத்தக்கது* மதன்
மனிதனை பயமுறுத்துமே தவிர இயல்பாய் இருக்க விடாது.
அதே சமயம் தான்
அறிந்த இறைவன் பற்றி மற்றவருக்கு சொல்ல இந்த பிரபஞ்சத்தில் தடை ஒன்றும் இல்லை.
அப்படி அதை தடுக்க சர்வாதிகார போக்கு இருப்பின் ஒரே இறைவன் அதை உடைத்தெறியும் செயல்களும்
நடந்துகொண்டுதானிருக்கும். அதை நிதானித்து அறிய அத்தகையோருக்கு நேரமில்லாமல்
இருக்கலாம்.
மதம் மட்டுமே
பிடித்த மனிதன் இறைவனை அறிந்திராத மக்களுக்கு ஒப்பாவனே தவிர வேறொன்றுமில்லை.
கடைசியாக,
குறிப்பாக ஒரு
வேண்டுகோள்,
கடவுள் பற்றி
அலசுங்கள், விவாதியுங்கள், ஒத்துகொள்ளாமல் கூட சிலர் அப்படியே இருங்கள்,
யாருக்கும் ஒன்றும் இல்லை.!
ஆனால், மனிதன்
செய்யும் செயல்களுக்கு தன்னால் விளங்கிக்கொள்ள இயலாத, அறிய இயலாத கடவுள் பற்றி
அவதூறாக, ஏளனம் செய்வது என்பது நம்மை நாமே நிலை மாற்றிகொள்வது போல ஆகிவிடும். இறை
நம்பிக்கை உள்ளவருக்கும் அது மிகுந்த மன உளைச்சலை தரும்.
ஆக்கபூர்வமாய்
சித்திக்கிறோம் என்று சொல்லி நம் நிலை தாழ்த்திக்கொள்ளவும், மற்றவரை மனமடிய
வைக்கவும் ஏன் முயலவேண்டும்.!
நிலையறிவோம்.!
அன்பே சிவம்..!
வாழ்க வளமுடன்..
வளர்க வையகம்.!
-
பூங்குன்றன்.
கருத்துகள்
கருத்துரையிடுக