முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளி காலங்கள்


தீபாவளி காலங்கள் 

அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வப்போது வெடிச்சத்தம்.. தீபாவளி வரும் நாளை நினைத்து நினைத்து புரட்டி எடுத்ததால் விவேகானந்தா காலண்டரின் பக்கங்கள் கிழிந்து தொங்கிற்று.


நாள் நெருங்க நெருங்க தெருவில் நடக்க சற்று பயம் எனக்கு தொற்றிக்கொண்டது.. போன வருஷம் இப்டித்தான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வர்ற வழியில் பக்கத்து தெரு பசங்க வெடியை வச்சுட்டாங்க..

டுப்பே’ன்னு வெடிச்சுது. யம்மாடி.. அலறி ஓட்டம் பிடிக்கையில் பார்த்து சிரிக்குறானுங்க.. ஏன்டே, ஆறாவது படிக்குற, வெடிக்கு இப்டி பயப்புடுற என பகடி செய்தார்கள். ச்சே.. பெருத்த அவமானம்.. இந்தமுறை காலுக்குள்ளே வீசிடுவாங்க போல. யய்யாடி.. கவனமா இருக்கணும் என் நடந்தேன்.

--------

துணி எடுத்து தைக்க குடுத்தாச்சு. முறுக்குக்கு மாவு அரசாச்சு.. ஆமா.. இன்னும் மூணு நாள்தான்.. டம்..டும்.. டமால்.. தீபாவளி வந்துரும்..

போன வருடம் மீந்த சில ஊசி வெடிகளை தேடி எடுத்தேன்.. அட.. ஒரு முழு பாக்கெட்டும் இருக்குதே என ஆச்சர்யமாக இருந்தது.. இத எப்படி விட்டு வச்சேன் என குழப்பம் தீரும் முன், அம்மாவின் குரல்..

“அடேய்.. கவனமா வெடிக்கனும்.. “

“சரிம்மா” (கவனம் முழுவதும் மீதமுள்ள வெடிகளை நோண்டுவதிலேயே இருந்தது)
“வெடி எல்லாம் பலசுடே.. வெடிக்கலன்னா விட்டுடு.. வெடிக்காத வெடியை போய் எடுக்க கூடாது, திடீர்னு வெடிச்சிடும்டே”

“தெரியும்மா..” வாசலை நோக்கி ஓடினேன் பற்றவைத்த ஊதுவத்தியுடன்..

------

“டப்..” (ஆமா.. ஊசி வெடிக்கு இவ்ளோ சத்தம்தான் வரும்)

அந்த சத்தத்துக்கே என் நண்பர்கள் கூடிவிட்டனர்..

“டே.. ஆளு.. வெடி வாங்கிட்டிங்களா உங்க வீட்டுல..?”

“இது போன வருஷம் வசிருந்ததுடே.. கார்த்திகைக்கு வெடிக்கலாம்னு வச்சிருந்தேன். ஆனா அப்ப வெடிக்கலை.. மறந்துட்டேன்..” இளித்தேன்..

ஆளாளுக்கு நா ஒன்னு நீ ஒன்னு என வெடிக்க ஆரம்பிச்சோம். பழைய வெடி என்பதால் பாதிக்கும் மேல் வெடிக்கவே இல்லை.. “பொறக்கி புஸ்வானம் போடுடே என்றார்கள்”..  ஆத்தாடி.. அங்கதனே சிக்கலு..


வெடிக்காத வெடி எல்லாத்தையும் எடுத்து புஸ்வானம் பற்றவைப்பது ஒரு கலை என கூறலாம்... வெடியை பிரிச்சு மருந்தை ஒரு பேப்பரில் கொட்டி, அதின் ஓரத்தை கவனமா பற்றவைத்தால்.. ஆஹா.. அணுகுண்டு போட்ட மாதிரி எரிந்து புகை எழும்பும். அதுவே புஸ்வானம் என்போம் நாங்கள்.


 ஆனால் அம்மா ஏற்கனவே அது பாதுகாப்பு இல்லை என்று சொல்லிட்டாங்க. ஆனாலும் மனசு கேட்கலை.. கிட்டத்தட்ட நாற்பது வெடிகள் வெடிக்காது திரி மட்டும் கருகிப்போய் கிடக்குது.. புஸ்வாணமா பத்தவச்சா சூப்பரா இருக்கும்.. ஆனா இப்போ எடுக்க பயமா இருக்கு.. விட்டுட்டு வந்துட்டா பயலுக எடுத்துட்டு போய்டுவானுங்க.


எல்லாத்தையும் அள்ளி ஒரு பேப்பரில் மொத்தமா போட்டு முட்டை போண்டாவை போல மடிச்சு வச்சேன். அம்மா கண்ணில் படாம இருக்க பழைய பேப்பர்கள் குப்பைகள் போடும் மூலையில் போட்டு வச்சேன்.. தீபாவளி அன்னைக்கு புஸ்வானம் கொளுத்திடலாம், அம்மாவுக்கு தெரியாது என மனசுக்குள் எண்ணினேன்.

----

தீபாவளி அதிகாலை..

“சொத்.. சொத்..”

வெடிச்சத்தம் இல்லைங்க.. என் முதுகில் விழுந்த அடிச்சத்தம்..

ஏன்பா புள்ளைய போட்டு தீபாவளியும் அதுவுமா அடிக்குற.. எண்ணை தேச்சு குளிக்க அடம் பிடிக்குறானா என்றார்கள் பக்கத்து வீட்டு அத்தை.

“அட.. அது இல்லக்கா.. குளிப்பாட்ட சுடுதண்ணி போட அடுப்பு பத்த வச்சேன்.. நாலஞ்சு பேப்பர அடுப்புல போட்டு எரிச்சா, டம்மு டும்முன்னு வெடிச்சிடுச்சு.. அடுப்பங்கரை பூரா புகை மண்டலம்.. இந்த பய எதிலையோ வெடியை கட்டி வச்சிருந்திருக்கான்” என அம்மா பதில் சொல்லிவிட்டு இன்னும் ரெண்டு வாங்கு வாங்கினார்கள் என்னை..”

“மன்னிச்சிடு தாயே..”

“மன்னிப்பு.?...” மீண்டும்.. சொத்.. சொத்..

அடியை கூட தங்கிக்கலாம்.. ஆனா நான் புஸ்வானம் விட எண்ணிய நெனப்பு புஸ்வாணமாகி போனதே எனக்கு வருத்தமா இருந்துச்சு.. ஆனால்.. மறுகணமே ...

புத்தாடை... கூடவே மூணு வடை, ஐந்து சுழியம், ரெண்டு அதிரசம், ஒரு முறுக்கு ... சும்மா லபக்”கிட்டு கை நிறைய வெடிகளுடன் ஊதுவத்தியை பத்தவசிகிட்டு தெருவை நோக்கி வீறுநடை போட்டேன்.


n  பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...