முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெண்புறா சிந்தனைகள்



குருவே மனதிற்கும் புத்திக்கும் என்ன வித்யாசம், இரண்டுமே கண்ணில் படுவதில்லை, நான் எப்படி அதை பகுத்து அறிவது.?

இங்கே வா.. இப்படி என் அருகில் உட்கார்

இதோ வந்துவிட்டேன் குருவே.. சொல்லுங்கள்

பளார்

இப்பொழுது நான் உன்னை அறைந்துவிட்டேன். நீ என்ன நினைக்கிறாய்?

எனக்கு குழப்பமாய் இருக்கிறது. கூடவே சற்று.........

கோபமாகவும் இருக்கிறது.. அப்படித்தானே?

ஆமாம் குருவே.! மன்னிக்கணும் என்னை. தாங்கள் செயல் நிச்சயம் ஏதோ ஒரு காரணம் கருதியே இருக்கும் என்பதை நான் அறிவேன்.

நல்லது.! என்னைத் தவிர வேறு யாரேனும் உன்னை அறைந்திருந்தால் நீ இவ்வளவு அமைதலாய் இருப்பது கடினம். ஏனெனில் உன் புத்தி உடனடியாய் செயல்பட்டு எதிர்வினையாற்றி இருக்கும். அந்த புத்தியின் அவசரத்தால் மனம் சொல்லும் செய்தியை கவனிக்க தவறியிருப்பாய்.

ஓ.. உண்மைதான்..

ஆமாம்.. ஆனால் இப்போதோ, உன் புத்தி தந்த கோபத்தையும் மீறி உன் மனம் உன்னிடம் உணர்த்தியதை வைத்து அமைதலாய் இதற்கு ஏதோ ஒரு காரணம் உண்டு என கவனித்து அமைதலாய் இருக்கிறாய்.

எங்கு இந்த வேறுபாடு நிகழ்கிறது, ஏன் அப்படி குருவே..?

அவசர புத்தி என கேள்விப்பட்டு இருப்பாய் அல்லவா..?

ஆமாம்.. அவ்வப்போது மக்கள் பயன்படுத்தும் சொல்லாடல்தானே குருவே..

சரி.. அலைபாயும் மனமுண்டு. ஆனால் அவசர மனம் என கேள்விப்பட்டு இருக்கிறாயா..?

இல்லை..! குருவே ஏன் இப்படி.?

புத்தியின் கட்டுப்பாட்டில் விழுவது சுலபம். ஏனெனில் புத்தி ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்குமானது. மனதின் கட்டுப்பாட்டில் அல்லது கட்டுப்படுத்துவது மிக அரிது.
ஏனெனில் மனது இந்த பிரபஞ்சத்திற்கானது..!



-மு.பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...